என் நண்பர்களுக்கு எனக்கு தெரிந்ததை சொல்ல என்றும் தயங்கியதில்லை. TRADING செய்யும் போது யாரோ அல்லது எங்கோ இருந்து வரும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் TRADING செய்யும் போது உங்களுக்கு ஒரு வித பதட்டம் இருப்பதை தவிர்க்க முடியாது. PANIC BUYING அல்லது PANIC SELLING மட்டுமே செய்ய முற்படுவீர்கள், அதே நீங்களே TECHNICALS கற்று தாமாகவே ஒரு BULLISH BREAK OUT அல்லது BEARISH BREAK OUT அல்லது இன்னும் எதையோ கண்டுப்பிடிக்கும் போது நிதானமாகவும் கச்சிதமாகவும் TRADING அல்லது INVESTMENT செய்ய முடியலாம் என்பது எனது கருத்து. முதலில் கடினமாகத்தான் இருக்கும் பிறகு நிச்சியம் லாபம் அதிகம் நட்டம் குறைவு என்ற நிலை வரும். மீண்டும் நான் சொல்ல விரும்புவது நமது லாபம் மற்றும் நட்டத்திற்கு நாமே பொறுப்பு, யாரோ அனுப்பும் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் நமக்கு லாபம் தராது இது என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை. நீங்கள் எந்த தொழில் செய்பவராக இருந்தாலும் அந்த தொழிலை பற்றி நீங்கள் முழுவதும் அறிந்துள்ளதால் தான் சிறப்பாக செய்ய முடிகிறது. பங்குசந்தைக்கும் இது 100% பொருந்தும். வாழ்த்துக்கள்
1 comment:
Yes I accept your kind advise friend, keep your articles going on
Post a Comment