Sunday, July 29, 2012

சந்தை வீழ்ச்சியிலும் சரியாத பங்குகள்(bucking the trend)

           நமது பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக பெரியதாக உயராத பொழுதும் பல நல்ல நிலையில் நிர்வகிகப்படும் நிறுவனங்களின் பங்குகளை கரடிகளால் வீழ்த்த முடியவில்லை, இதுபோன்ற பங்குகளை தேர்வு செய்து வாங்கினால் நஷ்டம் குறைவாகவும் லாபம் அதிகமாகவும் ஈட்ட முடியும். உங்களுக்காக சில நல்ல பங்குகளை கீழே கொடுத்துள்ளேன்.

HINDUNILVR ( HINDUSTAN UNILEVER)

          FMCG துறையில் உள்ள மிகப்பெரிய மற்றும் தரமான நிறுவனம். Fundamental மற்றும் Technical  இந்த இரண்டு ரீதியாகவும் மிகவும் பலமாக உள்ளது. குறுகியகாலம், நடுத்தர காலம், மற்றும் நீண்ட காலத்திற்கு ஏற்ற பங்கு. தற்பொழுது 52 வார உச்சத்திற்கு அருகில் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது.





HDFC BANK
 
          தனியார் வங்கியில் நாட்டின் இரண்டாவது பெரிய வங்கி, மேலும் வரா கடன் மிகவும் குறைவாக உள்ள நிறுவனம்.தொடர்ந்து DIVIDEND வழங்கிவரும் நிறுவனம். NIFTY, SENSEX இவை இரண்டிலும் உள்ள BLUECHIP பங்கு. நீண்ட காலத்திற்கு ஏற்ற பங்கு. தற்பொழுது 52 வார உச்சத்திற்கு அருகில் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது.
 


POWERGRID

          பொதுத்துறையை சேர்ந்த மின்பகிர்மானம் துறையில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனம். கொழுத்த லாபத்துடன் இயங்கும் நிறுவனமும் கூட. தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு DIVIDEND கொடுத்துவரும் BLUE CHIP நிறுவனமாகும். TECHNICALஆக இதன் பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. அதை கீழே கோடிட்டு காட்டியுள்ளேன். 115க்கு மேல் 120-150 வரை செல்ல நல்ல வாய்ப்புள்ளது. குறுகியகாலம், நடுத்தர காலம், மற்றும் நீண்ட காலத்திற்கு ஏற்ற பங்கு. தற்பொழுது 52 வார உச்சத்திற்கு அருகில் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது.

 ITC (INDIAN TOBBACO COMPANY)

          25 வருடங்களுக்கு மேல் நல்ல நிலையில் இயங்கிவரும் தனியார் துறையை சேர்ந்த FMCG, PAPER, CIGARETTE, HOSPITALITY போன்ற MULTIBUSINESS துறையை சேர்ந்த மிக தரமான பங்கு. குறுகியகாலம், நடுத்தர காலம், மற்றும் நீண்ட காலத்திற்கு ஏற்ற பங்கு. தற்பொழுது 52 வார உச்சத்திற்கு அருகில் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது.



TCS ( TATA CONSULTANCY SERVICES)

          இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் (SOFTWARE) நிறுவனம், மேலும் TATA குழுமத்தை சேர்ந்த மிகப்பெரிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் வருமானமும் லாபமும் பிரம்மாண்டத்தின் உச்சம். தொடர்ந்து நல்ல DIVIDENDஐ இதன் முதலீட்டாளர்களுக்கு தொடர்ச்சியாக கொடுத்துக்கொண்டுள்ள நிறுவனம். NIFTY, SENSEX இவை இரண்டிலும் உள்ள BLUECHIP பங்கு. நீண்ட காலத்திற்கு ஏற்ற பங்கு. தற்பொழுது 52 வார உச்சத்திற்கு அருகில் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது.




ACC (ASSOCIATED CONSTRUCTION COMPANY)


            நாட்டின் சிமெண்ட் உற்பத்தியில் முன்னணி நிறுவனம். தொடர்ந்து DIVIDEND வழங்கிவரும் நிறுவனம். NIFTY, SENSEX இவை இரண்டிலும் உள்ள BLUECHIP பங்கு. நீண்ட காலத்திற்கு ஏற்ற பங்கு. தற்பொழுது 52 வார உச்சத்திற்கு அருகில் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது. 1100 விலைக்கு அருகில் வரும்பொழுது வணங்கலாம்.




மேல் சொன்ன பங்குகளை தவிர பல LARGECAP, MIDCAP மற்றும்  SMALLCAP பங்குகள் TECHNICALலாக நல்ல நிலையில் உள்ளன அவற்றையும் கீழே கொடுத்துள்ளேன்.

APOLLOHOSP, CUB(CITY UNION BANK), MRF, APOLLOTYRE, BAJAJ-AUTO, SUNPHARMA, LUPIN, MARICO, THANGAMAYL, TITAN, YESBANK, VGUARD, TTKPRESTIGE, DRREDDY, DIVISLAB போன்ற பங்குகள் மிகவும் பலமாக உள்ளன. இவற்றை கவனித்து வர்த்தகம் மற்றும் முதலீடு செய்யுங்கள். முடிவு உங்களுடையதாக இருக்கட்டும், யார் சொல்வதையும் அல்லது எந்த குறுஞ்செய்திகளையும் நம்பி நட்டமடைய வேண்டாம்...

Saturday, July 28, 2012

பங்குசந்தையில் சிறு முதலீட்டாளர்களுக்கு சில தகவல்கள்!!!


          இந்திய பங்குசந்தையில் சிறுமுதலீட்டாளர்களின் பங்களிப்பு குறப்பிடத்தக்கது.  ஆனால் இன்றைய சூழ்நிலையில் பங்குச்சந்தையால் மிக அதிகமாக பாதிக்கப்படுவதும் இவர்களே!

          உலகத்திலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு , உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு. எனவே நமது பங்குசந்தை அடுத்த 15-25 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் உயரவே வாய்ப்புள்ளது என்றும் மேலும் கடந்த 20 ஆண்டுகளாக இந்திய பங்குச்சந்தை வருடத்திற்கு 15-25%  லாபம் கொடுத்துள்ளது என்றும் பொருளாதார மேதைகளால் அடிக்கடி சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பங்கு தரகு நிறுவனங்கள் போலியான பல கவர்ச்சிக்கரமான விளம்பரங்களை வெளியிடுகின்றன, அதை நம்பி சிறுமுதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குசந்தையில் நுழைந்து பெருத்த நஷ்டத்தை அடைவது தற்பொழுது மிக மிக அதிகமாக உள்ளது. மேலும் அடைந்த நஷ்டத்தை ஈடுக்கட்டுகிறேன் என்று மேலும் மேலும் நஷ்டத்தை அடைவதும், தொடர்ந்து நஷ்டம் வந்தாலும் ஒருவித போதை போல தொடர்ந்து பங்குசந்தையில் ஈடுபட்டு மேன்மேலும் நஷ்டமடைவதும் சிறுமுதலீட்டாளர்கள் தான். இதை முறைப்படுத்த எந்த சட்டமும் நம்நாட்டில் இல்லை. இன்று வர்த்தகத்தில் ஈடுபடும் எத்தனை சிறுமுதலீட்டாளர்களுக்கு பங்குசந்தையைப் பற்றிய அடிப்படை அறிவு தெரியும்?


 1)       கடந்த காலத்தில் நமது பங்குச்சந்தை 20% அளவிற்கு லாபம் கொடுத்ததற்கு முக்கிய காரணமாக அரசியல் ஸ்ரத்தன்மை உடையதாக இருந்தது, அனால் இன்று ஆளும்கட்சி அதன் கூட்டணி கட்சிகளின் நெருக்கடி காரணமாக என்ன பாடுபடுகிறது என்பதை நான் சொல்லித் தெரிய தேவை இல்லை. இதேபோன்ற நிலைதான் வருங்காலத்திலும் தொடரும் எனவே நாட்டின் வளர்ச்சிவேகம் நிச்சயம் குறையும், அதனால் அதன் தாக்கம் வரும்காலத்தில் நமது பங்குசந்தையிலும் நிச்சயம் எதிரொலிக்கும்.


2)        உலகப்பொருளாதாரம் மிகவும் பலவீனமாக உள்ளதென்றால் நம் நாட்டின் பொருளாதாரம் அதை விட பலவீனமாக  (Under Perform) உள்ளதை நம்நாட்டு நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. 100க்கு 75 நிறுவனங்களின் லாபம் பெருமளவில் சரிந்துள்ளன. இந்த நிலையில் நமது பங்குச்சந்தை எப்படி உயரும்?


3)        இந்த வருடம் நாடு முழுவதும் மழையின் அளவு மிக மிக குறைவு, மேலும் பல மாநிலங்கள் வறட்சியின் கோரப்பிடியில் உள்ளது.


4)        நாட்டின் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் மிகவும் அதிகமாக உள்ளது, நாட்டின் தொழிற்வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக கடுமையாக வீழ்ந்துள்ள நிலையில் இறக்குமதியையே பெருமளவில் சார்ந்துள்ள நம்நாட்டின் பங்குச்சந்தை எப்படி உயரும்?


          ஆனால் இது எதுவும் சிறுமுதலீட்டாளர்களுக்கு தெரிவதில்லை, தெரிந்துக்கொள்ளவும் விரும்பவில்லை ஆனால் 10000 ருபாயை பங்குசந்தையில் போட்டால் ஒருவருடத்தில் இரட்டிப்பாகிவிடும் என்று எவரேனும் சொன்னால் இன்னமும் நம்பிக்கொண்டுள்ளார்கள்...

Thursday, July 26, 2012

Axisbank பங்கில் symmetrical triangle pattern உருவாகியுள்ளது

        AXISBANK பங்கில் symmetrical triangle pattern உருவாகியுள்ளது, அதை கீழே உள்ள படத்தில் பார்க்கலாம். அதன்படி 1000- 1200 புள்ளிகள் suppport மற்றும் resistance புள்ளிகளாக உள்ளன கவனித்து முதலீடு மற்றும் தினவர்த்தகம் செய்யுங்கள்.