Tuesday, August 7, 2012

சந்தையில் திடீர் எழுச்சி நீடிக்குமா?

           அமெரிக்கப்பங்குச்சந்தையில் நிகழ்ந்த எழுச்சியே திங்களன்று நமது  பங்குசந்தையிலும் எதிரொலித்தது, ஆனால் தொலைக்காட்சிகள், அனைத்தும் ப.சிதம்பரம் பதவிஏற்றதினால் சந்தை உயந்ததை போல் ஒரு மாயையை ஏற்படுத்துகின்றன, இந்தநேரத்தில் சிறு முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் பொறுமையுடனும் விழிப்புடனும் சந்தையில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை செய்யவேண்டும்.

            நாட்டின் பணவீக்கம் அதிகமாக உள்ளது, இந்தவார இறுதியில் தொழில் வளர்ச்சி குறித்த அறிவிப்பு இவை இரண்டுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் காரணிகளாக உள்ளன. நான் மேற்சொன்ன தகவலால் சந்தை இறக்கம் அடையும் அல்லது ஏற்றம் அடையும் என்பதை சொல்லவில்லை. சந்தை குறித்த தகவல்களை தெரிந்து மட்டும் தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்யுங்கள், வதந்திகளை என்றும் நம்பாதீர்கள்.....

No comments: