கடந்த வாரத்தில் NIFTY 191 புள்ளிகள் உயர்ந்து 5178.40 என்ற புள்ளியில் முடிந்துள்ளது. கடந்த வாரத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை பார்ப்போம், நமது நிதிஅமைச்சர் 10% GDP வளர்ச்சி எட்டப்படும் என்று அறிவித்துள்ளார். மத்திய அமைச்சர் அம்பிகா சோனி சில அரசு துறை நிறுவனங்களுக்கு MAHA RATNA அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். FIIகள் நமது சந்தையில் தங்களது முதலீடை தொடர்ந்து செய்து கொண்டுள்ளனர். JAPAN பங்குச்சந்தை குறியீடான NIKKEI 3 மாத உச்ச புள்ளியை அடைந்துள்ளது, AMERICA சந்தையான NASDAQ 52 வார உச்ச புள்ளியை தொட்டுள்ளது. நமது சந்தைக்கும் கெட்ட செய்திகள் எதுவும் இல்லை, வரும் வாரத்திலும் இந்த நிலை தொடர்ந்தால் நமது சந்தையிலும் புது உச்சங்களை எதிர்பார்க்கலாம்.
என் நண்பர்களுக்கு நான் என்றும் சொல்வது குறைந்த VOLUMEல் TRADINGம், அதிக அளவில் முதலீடும் மட்டுமே அதிக லாபம் தரும். OUTPERFORM செய்யும் பங்குகளை கண்டறிந்து துறைகள் வாரியாக உங்கள் முதலீடை தொடருங்கள். A GROUP பங்குகளிலேயே நல்ல லாபம் ஈட்ட முடியும், மற்ற பங்குகளில் கவனம் வேண்டாம். TECHNICALS அறிந்து மட்டுமே TRADING செய்யுங்கள். கண்மூடித்தனமாக வர்த்தகம் செய்ய வேண்டாம், சந்தைகள் மிகவும் உச்சத்தில் உள்ளதால் F&O செய்வதை தவிர்க்கவும். அவசரம், பதட்டம், பேராசை இவைகளே உங்களை சந்தையின் போக்கிற்கு எதிராக அழைத்துசெல்லும் எனவே கவனமாகவும் பொறுமையாக சிந்தித்து செயல்படுங்கள், உங்களது மனநிலையை உங்கள் கட்டுக்குள் வைத்து செயல்படுங்கள். உங்கள் லாபத்திற்கு என் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment